ஆறு மணி நேர பிரிவு
என் அங்கத்தை
அறுத்துவிட்டது
செல் போன் ஒலிக்காக-என்
செவிகள் தீட்டப்பட்டன !
செல்போன் ஒளிக்காக-என்
கண்கள் அலை பாய்ந்தன!
உனது வேலை பளு எண்ணி
உன்னை அழைக்க நினைத்த
மனம் ஆசையை
அடக்கி வைத்தது
இருந்தும் ஒரு முறை
அழைத்தேன்
பதில் இல்லாமல்
பரிதவித்தேன்
மீண்டும் காத்திருக்கிறேன்
உன் அழைப்பிற்காக!......
No comments:
Post a Comment