Pages

Tuesday, May 31, 2011

குறட்டை ஒலி

இரவு முழுவதும்
உறங்காமல்
ரசித்துகொண்டிருந்தேன்
பக்கத்தில்
குறட்டை ஒலி

Sunday, May 22, 2011

உன் அழைப்பிற்காக....


ஆறு மணி நேர பிரிவு
என் அங்கத்தை
அறுத்துவிட்டது

செல் போன் ஒலிக்காக-என்
செவிகள் தீட்டப்பட்டன !
செல்போன் ஒளிக்காக-என்
கண்கள் அலை பாய்ந்தன!

உனது வேலை பளு எண்ணி
உன்னை அழைக்க நினைத்த
மனம் ஆசையை
அடக்கி வைத்தது
இருந்தும் ஒரு முறை
அழைத்தேன்
பதில் இல்லாமல்
பரிதவித்தேன்

மீண்டும் காத்திருக்கிறேன்
உன் அழைப்பிற்காக!......

Tuesday, May 17, 2011

பத்திரமாய் பார்த்துகொள்


பேச துடிக்கும் இதயம்
வர மறுக்கும் வார்த்தை
பொங்கி வரும் கண்ணீர்
என்
கவலையெல்லாம்
உன் மீது
என்
கவனமெல்லாம்
உன் மீது
பத்திரமாய் பார்த்துக்கொள்
உன்னையும்
உனக்குள் இருக்கும்
என்னையும் !